மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களுக்கு ஆயர் இல்லத்தில் வைத்து 17.10.2020 அன்று ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
அரசாங்க அதிபராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் மதத்தலைவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட அரச அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்கள் மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசொன்றும் ஆயர் பொன்னையா ஜோசப் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இவ்விஜயத்தின்போது உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் திரு.கே. தயாபரன், மாவட்ட தகவல் அதிகாரி திரு. வீ. ஜீவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.