மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணிகளின் சுற்றுலாமையமாக மாற்றிமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த நிலையில் 12.09.2020 அன்று சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.கெட்டியாராச்சி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
நடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை சுற்றுலாமையமாக மாற்றியமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதன் போது ஒவ்வொரு கட்டமாக சுற்றுலாத்துறையினருக்கு ஏற்ற வகையில் எல்லா வசதிகளையும் கொண்டதாக மாற்றி அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டனர். அப்போது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமாக காட்டப்படுவதனால் இதனை ஒரு வருமானம் ஈட்டக்கூடிய இடமாகவும், இருக்கின்ற பழைமையை மாற்றாமல் கவர்சிமிக்கதாக்கி கொண்டு முன்னெடுப்பதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
கோட்டையில் கலாச்சார விளுமியங்களை பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகள், பண்பாட்டு கலாச்சார உடைகள், உணவுகள், நூதன சாலைகள் மற்றும் நமது மக்களின் வணக்கமுறைகள் என மாவட்டத்திற்கென தனித்துவமான பண்பாட்டு பின்ணனிகளை பிரதிபலிக்கும் விடையங்களையும் கொண்ட ஒரு மத்திய நிலையமாக மாற்றி அமைப்பதற்கான முதற்கட்ட வேலையாக தகவல் மையம் ஒன்றை அமைத்து அதனுடாக செயற்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினரை கவரக்கூடிய இடங்களாக பல இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது அதில் முக்கியமானதாக உன்னிச்சை, தொப்பிக்கல் மலை, பொண்டுகள் சேனை, பனிச்சங்கேனி மற்றும் மட்டக்களப்பு வாவியில் மிதக்கும் படகு வீடுகளை அமைத்து அதில் சிற்றுன்டிச்சாலைகளை அமைப்பது போன்ற முன்மொழிவுகள் செய்யப்பட்டது.
தொப்பிக்கல் மலையில் இயற்கைப் பூங்காக்களை அமைப்பது, காட்டு விலங்குகளை அவதானிக்க கூடியதான சுற்றுலாத்துறையினரை கவரக்கூடிய திட்டங்களை செய்வதற்கும், மேலும் மாவட்டத்தில் சுற்றுலாத்தளங்களை அடையாலம் கண்டு அபிவித்தி செய்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் காணி மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சனி முகுந்தன் ஆகியோரும் திரு.எஸ்.கசின் பணிப்பாளர் அபிவிருத்தி, திருமதி உமா நிரஞ்சன் பணிப்பாளர் திட்டமிடல், திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி பணிப்பாளர் திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், அவுஸ்ரேலிய எஸ்4 நிறுவனப்பிரதிநிதிகள், சுற்றுலாத்துறை சார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.